சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

சனி, ஜூலை 10, 2010

குடும்பம்

ஒற்றை விரலால் கலைத்துப்போடும்
சிலந்தி வலையின் வன்மையை
சிக்கி உணவாகும் உயிர்கள் அறியும்

தொட்டதும் விரலில் படியும்
மென்மை நீரின் வன்மை
தீரா நதிகளில் நனைந்து, தேய்ந்து
வன்மை இழக்கும் பாறைகள் அறியும்.

 நீ
சிலந்தி வலையின் நூலெடுத்து
எனை சிறைப்படுத்தும் போதும்
கலைத்தெழ மனமின்றி கட்டுக்குள் நான்.
நதியலையால் தேய்த்து ஓடும் போதும்
விலக்கி விட மனமின்றி உனைத் தாங்கி நான்

கற்களால் சமைத்த சுவர்களை
வீடாக்கி
சின்ன அறையில் ஒரு உலகம் காட்டி
சிறைப்படுத்தி
இயல்பாய் எல்லாம் வெகு இயல்பாய்....

தீயாய்ப்பற்றும் நீயே,
அணைக்கும் நீராகி
என்னை
பரந்த வெளியின் சுதந்திரம் விட்டு,
உன்னில் சிறைப்படவே விரும்பும் கைதியாக்கி
தந்திரமாய் எல்லாம் வெகு தந்திரமாய்.....

சக்கரவாகத்திற்கு மழையாய்
பூக்களில் விலங்கிடும் உன்
அன்பின் வாசம்....


1 கருத்துகள்:

bogan சொன்னது…

அற்புதம் தோழி.