சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

செவ்வாய், பிப்ரவரி 02, 2010

உளவியல் மயக்கம்.

அதிகாலைக்கனவு கலைத்து
ஆனந்தத் தூக்கம் விரட்டும்
கடிகார எழுப்புமணி,
சாட்டை சொடுக்க
அரக்கப்பரக்கசுழலும்  உடல் பம்பரம் .

அலங்காரமும்
அழகு ஆடையும் புனைந்து
அலுவலகம் நுழைந்தால்
பெண்ணின் இருப்பில் இருவேறு உணர்வுகள்.

கொஞ்சம் வேலை,கொஞ்சம் வம்பு
கொஞ்சம் ஊடகம்,கொஞ்சம் விமர்சனம்
கொஞ்சம் சமையல்,கொஞ்சம் குடும்பம்
கலவையாய் பொழுதுகழித்து
மாலை கூட்டுக்கு.

மறுபடி ஊடகம்,ஊடல்கள்,கூடல்கள்
யாரோ விதைத்த கடிகார சுழற்சியாய் வாழ்க்கை
நாட்காட்டிகளிலும்,
கடிகார முட்களிலும் நகர்ந்து,நகர்ந்து
உளவியல் மயக்கத்தில் முடிந்தது.

அமைதி தேடி
ஆன்மீகம்.
பக்தி செய்யவே விடவில்லை
பக்கத்தில் நின்றவரின் பட்டுப்புடவை

தியான வகுப்பில் அறிவுறுத்தப்பட்டது
புருவங்களுக்கிடையே கவனம் குவிக்க.
அங்கோ,அணுக்கத்தில்
அமர்ந்திருந்த அடுத்த பெண்ணின்
கனத்த கழுத்துச்சங்கிலியில்
கவனம் குவிந்தது.

வாசிப்புப்பழக
வரவேற்பறை முதல்
அடுப்படி மேடை வரை புத்தகங்கள்
வாசிக்கும் கணங்களின்
வார்த்தைகளின் மணம்
பின் வாசமற்று காகிதப்பூக்களாய்...

இங்கே
மயக்கங்கள் தொடரும்
மனதில் மாற்றம் வரும் வரை....

3 கருத்துகள்:

Paleo God சொன்னது…

அருமையான வரிகள் ..:))

கதிர் எழுதியதுபோலத்தான்..
தனி தனியாகவே படித்தேன் ஒவ்வொன்றும் அழகு..:)

வாழ்த்துக்கள்.

துபாய் ராஜா சொன்னது…

//அமைதி தேடி
ஆன்மீகம்.
பக்தி செய்யவே விடவில்லை
பக்கத்தில் நின்றவரின் பட்டுப்புடவை

தியான வகுப்பில் அறிவுறுத்தப்பட்டது
புருவங்களுக்கிடையே கவனம் குவிக்க.
அங்கோ,அணுக்கத்தில்
அமர்ந்திருந்த அடுத்த பெண்ணின்
கனத்த கழுத்துச்சங்கிலியில்
கவனம் குவிந்தது.//

அருமையான வெளிப்பாடு.

Ganesan சொன்னது…

அருமை அருமை