சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வியாழன், செப்டம்பர் 08, 2011

குழந்தையும், பொம்மையும்




அந்தக்குழந்தை பேசிக்கொண்டிருந்தது
சலசலவெனும் நீரோடையைப்போலவும்
சருகுகள் மீது பெய்யும் அடர் மழையைப்போலவும்
அந்தக்குழந்தை பேசிக்கொண்டிருந்தது

கண்களில் இருந்த கனவுகளின் வெளிச்சம்
கன்னங்களில் பிரதிபலிக்க
அந்தக்குழந்தை பேசிக்கொண்டிருந்தது
அதன் பேச்சுக்குத்தலையாட்டும் ஒருவர்
போதுமானதாய் இருந்தது இந்த கணத்தில்.
கேட்பதற்கு யாருமில்லா தனிமையில்
அதன் உலகில் அதுவும் அதன் குழந்தைபொம்மையும்

பொய்ப்பால் புகட்டி
பொய்யாய்த்தூங்கப்பண்ணி
தட்டிக்கொடுத்தபடி தானும் தூங்கிப்போகும்
அதன் கனவுகளில்
உயிர் பெற்று விளையாடுகிறது பொம்மை.

1 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

மிக அருமை சாந்தி.

அடிக்கடி எழுதுங்கள்.