சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

புதன், நவம்பர் 18, 2009

அமைதியைத்தேடி....

உண்மை உரைப்பதாய்
மனத்தின் மலங்களை
நடுவீட்டில் கொட்டும் நண்பர்களால்
நாற்றமடிக்கிறது என் மனதும்
வாழ்வின் அழகியல் புரியாது
அவலங்களையே புலம்பும் மனங்களின்
தீய்ந்த மணத்தால் புரையேறுகிறது எனக்கு
புடைவைகள், நகைகள்
உடமைகளின் பெருமைகள்
உறவுக்கூட்டங்களின் வருகைகள்
ஊர் வம்புகள், குறைகள் குறித்த உரையாடல்கள்
மூச்சுத்திணறுகிறது எனக்கு
வனாந்திரம் தேடிப் போனாலும்
வனங்களின் மரங்களில் முனகுகிறது
ஆணி கொண்டு அழுந்த வரைந்த
காதலர் இதயங்கள்