சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

சனி, நவம்பர் 21, 2009

ஈரம்

இதோ

என் வாழ்க்கை முடியப்போகிறது.

இந்த

பூமிக்கும் எனக்குமான பந்தம்

முற்றுபெற இருக்கிறது

எனக்கான இன்னொரு உலகம் எப்படி இருக்கும்.



கண்களின்

கடைக்கோடியில் நீர் வழிகிறது

பேரக்குழந்தைகளின் மழலை மொழிகள்

செவிகளில் தேனிறைக்க

தாகத்திற்கு

தண்ணீர் தராத கரங்கள் தந்த பால்

கடை வாயில் வழிகிறது.

வீடு என்னவோ நிறைந்து கிடக்கிறது

வெறுமையாய்க் கிடக்கிறது என் மனம்



எல்லோர் மனதிலும் மோதும்

சொத்துக் கணக்குகள்

வங்கி இருப்புகள்

என் விரல் பற்றி

திருநீறு தொட்டு

இட்டுக்கொள்ளும் ஆண்பிள்ளைகள்,

தனிமையில் என்னைவிட்ட பாவம் போக்க

அழுத கண்ணீர் அனைவரும் பார்க்க

வடித்தபடி அமர்ந்திருக்கும் பெண்கள்



ஊறி, உளுத்துப்போன சம்பிரதாயங்கள்

உலர்ந்து, இறுகிப் போன மனித ஈரம்

எதையோ தேடி எப்படியோ ஓடி

அர்த்தமற்று அபத்தமாகிப்போன மனித வாழ்க்கை

ஈரமற்று இருகிப்போன மனித இதயங்களை நனைக்க

உருகி வருகிறது

இரு துருவங்கள்

0 கருத்துகள்: