சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

சனி, நவம்பர் 28, 2009

தாத்தாவின் மரணம்

ஐயா!
அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும்
அத்தைகளுக்கும் அம்மாக்களுக்குமிடையில்
அன்புப்பாலமாய் நீ இருந்தாய்!
உன்
முதுமையை சீரணிக்கமுடியாத
அவர்களின் கண்களில்
நீ போட்ட உறவுப்பாலம் தெரியவில்லை
அவர்களுக்குள்
முரண்பட்டு முகம் திருப்பும் போதெல்லாம்
நேர்மறையாய் சேர்ந்து செல்ல சொல்லிக்கொடுத்த
முதிய வழிகாட்டி நீ
பிழைப்பிற்காக பிரிந்த உறவுகள்
திரும்பவும் ஒன்று சேரும்
மையப்புள்ளி நீ
நீ
முதுமையில் முடங்கிக்கிடக்கும் போது
யாருமற்றதாய் உணர்ந்தாய்
நானோ இளமையில் நீ இல்லாது
தனிமை உணர்கிறேன்
ஐயா!
உன் நினைவுகள் எனக்குள்
நீ சொல்லும் அன்புக்கதைகளாய்...
என் விரல் பிடித்து அழைத்துச்செல்லும் அன்புறவாய்...
'ராஜாப்பையா' என்றழைக்கும் அன்பொலியாய்...
என் அந்திமக்காலம்வரை
பாகப்பிரிவினையில்
சொத்துகளோடு
உறவுகளையும் பிரித்துகொண்டு
பாதைகள் வேறு
பயணங்கள் வேறாகிப்போன
அப்பா,பெரியப்பா
அத்தைகளின் மனதில் நீ என்னவாக இருப்பாய்.

0 கருத்துகள்: