சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

புதன், நவம்பர் 18, 2009

இயலாமை

எல்லா விருந்துக்கும்
எங்கு போனாலும்
ஒற்றைப் பட்டுப்புடவையையே
சுற்றி அணிந்து
பற்றாக்குறை நேரங்களில்
பற்று வரவைச்சரிசெய்ய
ஒற்றைச்சங்கிலியும் அடகுக்குப்போக
உதட்டில் புன்னகை
உள்ளுக்குள் உதறல்
பித்தளைச்சங்கிலி காட்டிக் கொடுக்குமோ?
உறவுகள், நட்புகளின் உரையாடல், கேளிக்கை
உடனிருக்க முடியாது
வீடு திரும்பும் என் இயலாமை
மூர்க்க கோபமாய் முகம் மாற்றும்
அன்பைக் பொழியும் என் கணவன் மீது.