சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

ஞாயிறு, ஜனவரி 31, 2010

நினைவுக்குமிழிகள்

வாசலில் ஓடிய மழை நீரில்
பழைய காகிதம் தேடிக்கிடைக்காமல்
பள்ளி நோட்டுகளின்
பக்கங்கள் கிழித்து மிதக்கவிட்ட கப்பல்கள்.
தெருவின் முடிவில், அன்றி
தேங்குமிடங்களில் தேங்கும் குப்பைகளாய்..

உன்னுடையதா? என்னுடையதா?
போட்டிகளில் பலியாகும்,
காகிதக்கப்பலில் பயணம் செய்யும் கட்டெறும்புகள்.

பால்யகாலத்து நினைவுக்குமிழிகள்
சட்டென வெடித்து வெளிவரும்.
நீயா? நானாவென போட்டியிடும்
இடங்களில்,
யாரோ பலியாகும் தருணங்களில்.

0 கருத்துகள்: