சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வெள்ளி, செப்டம்பர் 04, 2009

அறிமுகம்

ஆழி பேரலை ஊழி தாண்டவமாடி

மாடமாளிகையையும் மண் குடிசையையும்

ஒன்றாய் புரட்டிப் போட்டு

சமத்துவம் சொன்ன சரித்திர பூமியில்

புது யுகம் காண பூபாளம் பாடும்

புதுக்குயில்கள் நாங்கள்

சுனாமி விளையாடிப்போன

சுவடுகள் மிச்சமிருக்க

நாளை விடியும் என்ற நம்பிக்கையில்

சுக ராகம் பாடும் வானம்பாடிகள் நாங்கள்

அழிவு என்பதும் ஆக்கத்தின் தொடக்கம் தானே

இழப்புகள் என்றும் நிரந்தரம் இல்லை

இயற்கை ஒருபோதும் சுமையாவதில்லை

வந்தோர்க்கு வாழ்வு அளிக்கும்

வசந்த தீவின் வாசிகள் நாங்கள் நலம்

நலம் அறிய ஆவல்

0 கருத்துகள்: