சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வெள்ளி, செப்டம்பர் 04, 2009

காதல் என்பது...

கண்டதும் பற்றிக்கொள்ள
காதல் ஒன்றும் நெருப்பில்லை
கன்னியரும் தீக்குச்சியில்லை
புரிதலினால் வரும் காதலில் தான்
பூமியே புனிதம் ஆகிறது
ஏனென்றால் காதல்
பூமியில் போர்க்களங்களை உருவாக்குவதில்லை

* * * * *

நேசம் உள்ள இதயம்
அழகுக் கண்கள்
ஆப்பிள் கன்னங்கள்
கொவ்வை செவ்விதழ் தேடி வருவதில்லை
உண்மைக் காதல்
உள்ளம் பார்த்து உருகும்.
நெற்றிப் பரப்பில் வறுமை உழுத ரேகையிலும்
கன்னக்கதுப்புகளில் வயது உழுத சுருக்கங்களிலும்
கருத்த கூந்தல் நரைத்து
கண்கள் குழி விழுந்து
கல்லறை போகும் வரை தொடரும்...
மரணத்திற்குப் பின்னும் அந்தக்
காதலை
கல்லறை பேசும்...
காற்று பேசும்.....
காலமெல்லாம் அந்தக் காதல் வாழும்.

* * * * *