சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வெள்ளி, செப்டம்பர் 04, 2009

இன்றைய முதிர்கன்னிகள்

பெண்கள்
படித்தால் நீங்கும் அறியாமை என்றார்கள்
பட்டங்கள் பெற்றோம்
வேலைக்குப்போனால் விடுதலை என்றார்கள்
வளமான சம்பளம் தான்
ஆனாலும்
இன்று நாங்கள் முதிர் கன்னிகள்
அழகுக்கு இலக்கணம் சொல்லும்
பருவத்தின் வாசலில் நாங்கள்
பெற்றோர் சொல்லுக்காய்
காதலுக்கு கதவடைத்தோம்
விளைவு
இன்று நாங்கள் முதிர் கன்னிகள்
எங்களின்
சுயம்வரத்தில் வருகை தந்தனர்
மாப்பிள்ளைகள் வரமாலையோடு
மாலையிடும் உரிமை தான் மறுக்கப்பட்டது
வரமாலையுடன் வந்தவர்களை
தரம் பார்த்து தள்ளி விட்டே
மாறிப்போனது எங்கள் பருவங்களும்
எங்களின்
திறக்காத சம்பள உரைகளை
திறந்தே பழக்கப்பட்ட பெற்றோர்க்கு
மகளுக்கு பூச்சூட மனமில்லை
மனது மரத்து புத்தி விழித்துக்கொண்ட போது
கடந்து போயிருந்தது காலம்
இன்றும் நாங்கள் முதிர் கன்னிகள்

0 கருத்துகள்: