சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வியாழன், நவம்பர் 26, 2009

நான் ஒரு பெண்

அடுத்த வீட்டுப்பையனின்
பாட்டுச்சத்தம் கேட்டுவிட்டால்
அவசரமாய் என்னைத்தேடுவார் அப்பா
அவரின் மான அவமானம் நான்

அம்மா எனைப் பார்க்கும் போதெல்லாம்
அடி வயிற்று நெருப்பென
அடிவயிறு தொட்டு கடவுளைக் காட்டுவாள்
அவளின் நல் வளர்ப்பின் அடையாளம் நான்

தலை குனிந்து நட
சாலையில் சிரிக்காதே
உடையில் கவனம் கொள்
வாசல் கதவடை
அண்ணனின் புது ஆத்திச்சூடி
அவனின் கௌரவம் நான்

இப்படி பிறந்த வீட்டின்
மானமாய்,கௌரவமாய்
பெருமையாய் மட்டுமே இருந்து
பழக்கப்பட்ட எனக்கு
என் சுயம் மறந்து போனது
என் இயல்பு மறந்து போனது

சுயம்வரத்தில் கூட
வரமாலை மட்டுமே என் கைகளில்
வரனுக்கு மாலையிடக்கட்டளை
புகுந்த வீட்டிலும் என் நிலைப்பாடு ஒன்று தான்
களமும், காலமும், கோலமும் தான் வெவ்வேறு

1 கருத்துகள்:

நிகழ்காலத்தில்... சொன்னது…

பெண்ணின் மன ஓட்டங்களை அப்படியே கவிதை பிரதிபலிக்கிறது.

வாழ்த்துகள்..