சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வியாழன், டிசம்பர் 31, 2009

தினமணி நாளிதழ் தந்த சிறப்பு.



                தினமணி நாளிதழில் எங்களின் பெயர்களை வெளியிட்டு சிறப்பு செய்திருக்கும் கட்டுரை ஆசிரியருக்கும்,நாளிதழ் நிர்வாகத்தினருக்கும் சிரம் தாழ்ந்த,மனம் கனிந்த வணக்கங்களும்,நன்றிகளும் கோடி! இந்த புத்தாண்டு பரிசிற்கு நன்றி! வலையுலகம் குறித்த தெளிவைச்சொல்லித்தந்த மதிப்பிற்குரிய முனைவர்.மு.இளங்கோவன் ஐயா அவர்களுக்கு நன்றி! நன்றி!


கட்டுரைகள்

வலையுலகப் படைப்பாளிகள்!

First Published : 01 Jan 2010 12:12:00 AM IST


         எழுத்துலகில் இது தலைமுறை மாற்றத்துக்கான
 தருணம். பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பிவிட்டு, 
அது பிரசுமாகும் நாளுக்காகக் காத்திருக்கும் 
தலைமுறையின் காலம் கடந்துபோய்க்
கொண்டிருக்கிறது. பெரிய பத்திரிகையில் படைப்புகள் 
பிரசுரமாகின்றன என்பது படைப்பாளிக்குப் பெருமைதான். 
ஆனால், அது நடக்காவிட்டால், அந்தப் படைப்புகள்
குப்பைக் கூடைக்குத்தான் போக வேண்டும்
என்று இன்றையத் தலைமுறை எண்ணிக்
 கொண்டிருக்கவில்லை.
            வலைப்பூக்களில் பெண்களின் 
ஆதிக்கம் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இருப்பது 
வரவேற்கத் தகுந்த ஒன்று. வலைப் பதிவிடும் பெண்கள்
 பெரும்பாலும் கவிதை எழுதுகின்றனர் அல்லது 
சமையல் குறிப்புகளை வழங்குகின்றனர்.
 வாழ்க்கை அனுபவங்கள், குடும்பப் பிரச்னைகள், 
அம்மாக்களுக்கான ஆலோசனைகள், திரைப்பட,
 தொலைக்காட்சி விமர்சனங்கள் என இவர்களது 
எழுத்து வட்டம் கொஞ்சம் அடக்கமானதாகவும்
 பொறுப்புணர்வுடன் கூடியதாகவும் இருக்கிறது. 
சில பெண் படைப்பாளிகள் அரசியல், 
சமூகச் சிந்தனைகளையும் விதைக்கின்றனர்.
 ஃபஹீமாஜஹான், நளாயினி, புதியமாதவி,
 தமயந்தி, சாந்தி லட்சுமணன், கலகலப்ரியா, 
ராமலக்ஷ்மி, ரம்யா, கிருபாநந்தினி, மதுமிதா,
 தாரணி பிரியா, பெரியார் தமிழச்சி, மாதங்கி, 
விக்னேஷ்வரி, மழை ஷ்ரேயா போன்ற
 நூற்றுக்கணக்கானோர் ஆக்கப்பூர்வமான,
 அபூர்வமான படைப்புகளை பதிவிடுகின்றனர். 
÷தமிழ் இலக்கியங்களையும் மரபுவழி தமிழ்
 ஆராய்ச்சிகளையும் அடுத்த கட்டத்துக்குக் 
கொண்டு செல்லும் வகையில் சில 
வலைப்பூக்கள் செயல்படுகின்றன. 
மு.இளங்கோவன், இரா.குணசீலன்,
கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா,
 நா.கணேசன், சுப்ரபாரதி மணியன்,
 அழகியசிங்கர் போன்றவர்கள்
 வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். 
கவிதைகள், இலக்கியக் கூடல்கள்,
 புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவை
இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.




0 கருத்துகள்: