சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வெள்ளி, ஜனவரி 08, 2010

என் கேள்விக்கு யாரிடம் பதில்

தேவதைகளும்,ரதிகளும் நீராடிய
நதியோரங்கள்
பூக்கள்,நாணல்களின் படுகைகளுடன்
அலையாடிய மணல்விரிப்புகள்
பல்லக்கு,பரிவாரங்களுடன்
தெய்வத்திருவுருக்கள் நீராடிய
நாகரீகத்தொட்டில்கள்
நமது நதிக்கரைகள்

நாகரீகங்கள் தோன்றியது
நதியோரம் என்றது போய்
கழிவுநீர்க் கால்வாயானது
கங்கைகள்.
பூக்களின் இடத்தில் குப்பைகள் குவிய
புண்ணிய நதிகள் பல
புனலோடிய அடையாளங்களுடன்.
பசுமை மறந்த தாழைமடல்களில்
பறந்தனைந்த பிளாஸ்டிக் கழிவுகள்

பகீரதனின் வரம்
பூமியில் கங்கை எனில்
கங்கையின்
கழிவுகள் அகற்ற
எந்த தேவனிடம் வரம் கேட்கலாம்?
எப்படி தவம் இருக்கலாம்?
யாரிடம் இருக்கிறது பதில்கள்!

0 கருத்துகள்: