சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

திங்கள், ஜனவரி 11, 2010

மீண்டெழும் காலம்

ஒரே கூட்டில் அன்றில்களாய்
உறவாடிக்களித்து
உப்பில்லாத உணவையும்
பொய்யாய் ருசித்து
எனக்காக எதுவும் செய்வதாய் உறுதி தந்து
பாதிச்சம்பளத்தில்
பரிசுகள் தந்து
மாலை மல்லிகைக்கு மயங்கவைத்து
உருகி,உருகி என்னை வழியவைத்து
என்
பலவீனங்கள் அத்தனையும்
உனக்கான பலங்களாய் மாற்றி
உன்னை மட்டும் என் உலகமாக்கி
உன்னில் என்னை ஒளித்து வைத்தாய்
என்னில் உன்னை வார்த்துவைத்தாய்.

காலத்தின் மாறுதலில் வேடம் கலைத்து
விவாகரத்து பெற்று
வெவ்வேறு கதவுகள் வழி
விடைபெற்றுப்பிரிந்த காலம் கடந்தும்
மனதில் மீண்டெழுகிறது
திரும்பக்கிடைக்காத உன்னோடான தனிமைப்பொழுதுகள்.

0 கருத்துகள்: