சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

ஞாயிறு, ஜனவரி 31, 2010

இடைவெளிகள்.

பிணைப்புகள் ஏதுமற்று
திசையற்ற கானகங்களில்
உலவித்திரியவும்,

இரவு பகல் ஏதுமின்றி
நட்சத்திர,நிலவொளியில்
அலைகள் மோதிச்செல்லும்
சமுத்திரக்கரைகளில் அமர்ந்திருக்கவும்,

பசுமை விரித்த மலைமுகடுகளில்
சிந்தனைகள் ஏதுமின்றி
இயற்கையோடு ஐக்கியமாகவும்,

கொட்டும்மழையில்
நான் என்ற பிரக்ஞையற்று
குளிரக்குளிர நனையவும்,

ஆளரவமற்ற வயல் வெளிகளில்
குடிசைகளின் மண்தரையில்
சாணமிட்டு மெழுகி, கோலமிட்டு
சுள்ளிபொறுக்கி, கல்கூட்டிப்பொங்கியுண்ணவும்,

தூங்காத இரவுகளின் கற்பனையாயும்,
தூங்கும் விழிகளின் கனவுகளாயும்.
மின்சாரமற்ற நேரங்களில்
முடங்கிப்போகும் இயக்கங்களில்
அறிவிற்குப் புரிகிறது
கனவுகளுக்கும் நனவுகளுக்குமான இடைவெளிகள்.

0 கருத்துகள்: