சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வெள்ளி, ஜனவரி 15, 2010

போதைஅடிமை மனைவியின் பொய்முகம்

தேன் நிலா ஞாபகங்கள்
நினைவில் மீண்டெழ
நெற்றி திருத்தி
நேர் வகிட்டில் குங்குமமிட்டு
தொடுத்த மலர்ச்சரம்
கூந்தலில் சூட்டி
உனக்குப்பிடித்த புடவையில் நான்
நிலாக்காயும் மொட்டை மாடியில்
நட்சத்திரங்களிடம் உரையாடியபடி
உன்னோடான
காதல் நாட்களின்
கனவுகளில் லயித்து.
உன் வருகைக்கு காத்து...

கள்ளின் மயக்கத்தில்
கண்கள் கிறங்க
நீயோ
உன்னையும்,என்னையும்,உலகையும் மறந்து...
உள்ளுக்குள் பொங்கிய
உற்சாக ஊற்றுக்கள் கண்களில் வடிய
நிலவின் தண்கதிர்கள் சோகையாய் மறைய
உறக்கம் தொலைத்த இரவுகள் அதிகம்
ஊடலும் கூடலும் இன்றி...
அலைபேசிவழி அளவளாவும் உறவுகளிடம்
அவலத்தை மறைத்து புன்னகைபூக்க..
கூடல் நிகழாத இரவின் சாட்சியாய்
கொட்டிக்கிடந்த கூந்தல் மலர்கள் பரிகசிக்கிறது

0 கருத்துகள்: