சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

ஞாயிறு, ஜனவரி 10, 2010

நிலாக்காதல்.

உனக்கும் எனக்குமான இடைவெளிகள்
வானுக்கும் பூமிக்குமானது.
இடைவெளி குறைக்கும் காரணங்கள்
நம்மிடையே இல்லாத போதிலும்
புரியாத மனது உன்னிலேயே மையம் கொண்டு.

வானவில்லும்,நிலவும்
வசமாகாது தெரிந்தும் கை நீட்டும் மனக்குழந்தை.

சிதறும் எண்ணங்கள்
மறக்கும் உணவு நேரங்கள்

புரிதலும்,அறிதலும் அற்று
புன்னகை சிந்தும் உன்முகம் மட்டும்
பல்கிப்பரவி என்னில்.

முடியும்,முடியும் என்று உசுப்பிவிடும்
மனதுக்குப்புரியவில்லை
உன்னுடைய கனவுகளின் உயரங்கள்.

ஒவ்வொரு மரணத்திற்கும்
அஞ்சலியாய் சிந்தப்படும் ஒரு துளி கண்ணீர்
உன்மீதான காதலுக்கும் சிந்தி கைகழுவியது அறிவு.

மற என்று புத்தி சொல்ல
மறுக்கும் மனது துடிக்கிறது
அன்பு இணையாக முடியாவிட்டால்
அடிமையாய் இருக்கவேனும்..

0 கருத்துகள்: