சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வெள்ளி, ஜனவரி 08, 2010

எண்ண அலைகள் ஒன்று சேர்ந்தால்...2012


பற்றி எரிகிறது பூமி
வெடித்து சிதறுகிறது மலைகள்
கொந்தளித்து ஊரழிக்கும் கடல்கள்
வானம் உடைந்து பூமியில் விழும் இடிகள்.
மேகம் நீலம் இழந்து செந்நிறம் பரப்பி...
என்ன நடக்கிறது?
எவருக்கும் புரியவில்லை.
ஆருடம் சொல்லும் ஜோசியரும்
அமைதி தரும் ஞானிகளும்
எங்கே போயினர்?
மக்களின் வாய்கள் அழுகையில் கோண
கண்களில் பிரதிபலிக்கிறது
கேள்விகள்,கனவுகளை மீறி...

காலணி கழற்றி
இல்லம் நுழைகையில்
செவிப்பறைகிழிக்கும் ஓலங்கள்
"2012ல உலகம் அழியப்போகுதாம்.
அதுதான் இந்தப்படம்"
என்கிறான் பிஞ்சுமகன்,
கண்கள் விரிய
மனத்தின் திகில்
முகத்தில் இருள்
மொழியில் நடுக்கம்
அழிவைக்கூட கற்பனை செய்து
காசு பண்ணும் கூட்டம் ஒன்று
எண்ண அலைகள் ஒன்று சேர்ந்தால்
எண்ணியது நடக்கும் என்பதை மறந்து...

1 கருத்துகள்:

ஜீவன்சிவம் சொன்னது…

வாழ்வதற்கு லாயக்கற்ற இந்த பூமியில் வாழ்வதைவிட
அழிவது மேல் இல்லையா நண்பரே...