சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வெள்ளி, ஜனவரி 08, 2010

யசோதராவும்,ராகுலனும்

காலங்கள் சரிந்தும்
யுகங்கள் கடந்தும்
போதிமரத்தடியில் ஞானம் பெற்றவன்
புகழ்பாடுகிறது பூமி.

ஒற்றை இரவில்
முகாந்திரம் ஏதுமற்று
வாழாவெட்டியான
யசோதராவிடம்
மிச்சமில்லையோ
மேனகைத் தந்திரங்கள்.

அப்பனின் அண்மை இழந்து
அன்பு,ஆதரவு இழந்த
ராகுலனின் நினைவு வந்தால்
கூப்ப மறுக்கும் கரங்கள்
புத்தனின் திருவுருமுன்...

பூமியின் புத்திரர்களே!
ஒற்றை இரவில்
ஒரே வாரிசைத் திசைதிருப்பும்
மந்திரமனைவியரின் பூமியில்
சித்தார்த்தனை புத்தனாய்த்தந்தவர்களை
சிந்தியுங்கள்
புத்தனின் முன் கைகூப்பும் கணங்களில்,
ஒற்றை மணித்துளியேனும்....

0 கருத்துகள்: