சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

ஞாயிறு, ஜனவரி 31, 2010

விபத்துக்களும்,பிரார்த்தனைகளும்

வெற்றியா? தோல்வியா?
நிர்ணயமற்ற ஒரு போரின் முடிவில்
சினம் கொண்ட முகத்தோடு
சீறிக்கிளம்பும் உன்னைப்
பின் தொடரும் மனது
பிரார்த்தனைகளோடு.

எங்காவது கேள்விப்படும்
இருசக்கர வாகன விபத்துகளின் போதெல்லாம்
இருண்டு வெளிக்கும் என் வானம்.
இறந்து போனவனின் கவனம்
இல்லத்தில் சண்டையிட்ட மனைவியிடமோ?
தவிக்கும் மனது தீர்வு தேடும்.
நீ
வெளிக்கிளம்பும் தருணங்களில்
வேண்டாம் இனி விவாதங்கள்.

முற்றுப்புள்ளி வைத்தும்
முற்றுப்பெறாத உன் கோபம் விலக்க
புன்னகைப் பூக்களுடன்
உனக்குப்பிடித்த எல்லாமும் வீடு முழுதும்,
ஆனாலும்
தொடர் கதையாகும்
உன் கோபங்களும்
என் பிரார்த்தனைகளும்.

0 கருத்துகள்: