சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

திங்கள், ஜனவரி 18, 2010

சிதறடிக்கப்படும் சிலம்புகள்

சிலப்பதிகார
சிலம்புகள்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது
ஒவ்வொரு வீடுகளிலும் இன்னும்
காலங்கள் கடந்தும்
கோலங்கள் மாறியும்....

கண்ணகிகள்
தங்களின் கனவுகள் கொலையுண்டதற்காய்
கோவலன்களிடமே நீதி கேட்டு
சிலம்புகளை சிதறடிக்கிறார்கள்.

கோவலன்களோ
கண்ணகியின் கற்பையும்
மாதவியின் கற்பையும்
பழைய காகிதம் எடை போடும் உணர்வுடன்
தராசில் நிறுத்தி
விவாதங்களைத்தொடர்கிறார்கள் காலகாலமாய்

மாற்றம் என்பது உலக நியதி
ஆனாலும்
மாறாத நியதிகளை
மாற்ற முயலும் மணிமேகலைகள்
அட்சய பாத்திரங்களை இழந்து
அவமதிப்புகளை சுமந்து.....

1 கருத்துகள்:

Paleo God சொன்னது…

என்னமோ வலி தெரியிது.. வார்த்தைகள் எளிமையாய் இருந்தாலும், காரம்.

:)